ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் கூலி வேலை பார்க்கும் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும் கோவை புளியங்குளத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு கணவன், மனைவி இருவரும் கோவைக்கு சென்று வந்தனர். இதனையடுத்து சத்தியமங்கலம் வந்த கீர்த்தனா தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

அதற்கு கீர்த்தனாவின் தந்தை வருகிறேன் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கீர்த்தனா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீர்த்தனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.