திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டியில் பரதன்- தவமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று தவமணி பாளையத்தில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சியடைந்தார்.

அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது. உடனே தவமணி குஜிலியம்பாறை காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார். நேர்மையாக பணத்தை ஒப்படைத்த தவமணியை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர். அந்த பணத்திற்கு உரியவர்கள் ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.