ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியில் ஐயப்பன்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து அனிதா பலமுறை கேட்டுள்ளார்.

அதற்கு வேறு ஒருவருக்கு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், உங்கள் பணத்தை நான்கு மாதங்களில் திருப்பி தருகிறேன் என ஐயப்பன் கூறியுள்ளார். மேலும் அவர் அனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அனிதா திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.