சேலம் மாவட்டத்தில் உள்ள மாவேலி பாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அப்துல் அஜார் என்பது தெரியவந்தது.

அவர் அவுரா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அப்துல் அஜார் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.