இந்தியாவில் நவராத்திரி விழா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இதில் சைத்ர நவராத்திரி, ஷரதிய நவராத்திரி, குப்த நவராத்திரி. பொதுவாக நவராத்திரியின் போது ஒன்பது நாட்கள் துர்க்கையின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. அதே சமயம் நவராத்திரியிலிருந்து சுப காரியங்களும் தொடங்குகின்றன. இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி ஷரதிய நவராத்திரி தொடங்குகின்றது. இது அக்டோபர் 24 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவ இந்த ஒன்பது நாட்களும் இறைவனுக்கு படைக்கும் உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் நாள்:

வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை
இரண்டாம் நாள்:
புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்
மூன்றாம் நாள்:
கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
நான்காம் நாள்:
தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல்
ஐந்தாம் நாள்:
சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்
ஆறாம் நாள்:
தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், ஒரெஞ்ச் பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்
ஏழாம் நாள்:
எலுமிச்சை சாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு
எட்டாம் நாள்:
பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்
ஒன்பதாம் நாள்:
சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை போன்ற உணவுகளை படைப்பார்கள்.