2023 ம் ஆண்டில் ஆஷாட நவராத்திரி பஞ்சமி திதியானது ஜூன் 23 ம் தேதி மங்களகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. ஜூன் 23 ம் தேதி மாலை வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த நாளில் அனைவருக்கும் நன்மை தரக்கூடியதாக யாருக்கும் தீங்கு விளைவிக்காத விதமாக நம்முடைய கோரிக்கை நியாயமானதாக இருந்தால் வராகி நிச்சயமாக உடனடியாக அந்த கோரிக்கை நிறைவேற்றிக் கொடுப்பார். கஷ்டம் என்று மனதார நினைத்து வராகியை அழைத்தால் உடனடியாக நம்மை தேடி வந்து அருள் புரிவாள். “ஆசார பஞ்சமி பூஜன ப்ரியாகை நமஹ” என்ற மந்திரத்தை 7, 11, 27, 108 என்ற எண்ணிக்கையில் சொல்லி வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். மேலும்

1. பஞ்சமி
2. தண்டநாதா
3.சங்கேதா
4. சமயேஸ்வரி
5. சமய சங்கேதா
6. வராஹி
7. போத்ரினி
8. சிவா
9. வார்த்தாளி
10. மகா சேனா
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி
12. அரிக்ஞை இந்த 12 நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி திதி என்றும் வராஹி அம்மன் சன்னதியில் அல்லது வீட்டில் வராகியின் படத்திற்கு முன்பாகவும் சொல்லி வணங்கினால் தடைபட்ட அனைத்து காரியங்களுமே வெற்றிகரமாக முடியும்.