இந்தியாவில் நவராத்திரி விழா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இதில் சைத்ர நவராத்திரி, ஷரதிய நவராத்திரி, குப்த நவராத்திரி. பொதுவாக நவராத்திரியின் போது ஒன்பது நாட்கள் துர்க்கையின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. அதே சமயம் நவராத்திரியிலிருந்து சுப காரியங்களும் தொடங்குகின்றன. இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி ஷரதிய நவராத்திரி தொடங்குகின்றது. இது அக்டோபர் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது மிகவும் நல்லது. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.நவராத்திரி இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்றது. இதன் நேரடி அர்த்தம் ஒன்பது இரவுகள். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்காவிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தேவியின் அவதாரத்துடன் தொடர்புபடுத்தி மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகின்றது.