செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி ,நாம் தமிழர் கட்சி  10 பேரை கூட்டிட்டு வந்து காமிச்ச ஜோக் எல்லாமே நான் 17 வயசுலயே பாத்துட்டேன். இவங்க காட்டுற ஜோக் எல்லாம் 17 வயசிலேயே நான் பாத்துட்டேன்.  அச்சுறுத்தல்,  அடியாட்களை கூட்டிட்டு வந்து மிரட்டுவதெல்லாம் நான் சின்ன வயசுலயே பார்த்துட்டு தான்…. இன்னைக்கு 35 வயசு வரைக்கும்…..

தமிழ்நாடு அரசியலில் பயணம் பண்ணி இருக்கேன். என் வரலாறு என்னன்னு நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு நல்லாவே தெரியும். உன் கட்சியில இருக்கிறவன்… தெரு நாய் போல கத்திட்டு போறான். அவனுக்கு எல்லாம் என்ன பத்தி தெரியாது. சத்தியமூர்த்தி பவனில் என் தலைமையில… ஆயிரம் தொண்டர்கள்… என்னுடைய படை… என்னோட சோர்ஸ்…  சத்யம் மூர்த்தி பவன்ல என்ன கலவரம் பண்ணுச்சுன்னு… சீமான் அவர்களுக்கு நல்லா தெரியும்.

உங்களுடைய கட்சியிலிருந்த…. இப்ப திமுக கட்சியில் இருக்கக்கூடிய ராஜீவ் காந்தி தலைமையில 20 பேர் நாம் தமிழர் கட்சி சத்திய மூர்த்தி பவனுக்கு வந்துச்சு. என் தலைமையில ஆயிரம் பேரை கூட்டிட்டு போனேன். இதே காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய அங்க பங்காளிகள் தான். என் அக்காங்க தான்… என் அண்ணன்கள் தான்….

என் கட்சியை 2014இல் தடை செய்யணும்… என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தூக்கி வைக்கணும்னு தமிழக ஆளுநர் ரோசையா அவர்கிட்ட புகார் கொடுத்தாங்க. அப்ப ஏன் வரலாறு சீமான் அவர்களுக்கு தெரியும் ? எனக்குன்னு ஒரு அவதாரம் இருக்குது?  நான்  சிங்கிளா வந்து போறேன்னு நினைக்காதீங்க…  என்  இன்னொரு அவதாரத்தை நான் தரிச்சேன்னா…  நீங்க தமிழ்நாட்டுல நாம் தமிழர் கட்சி கட்சியை நடத்த முடியாது. அந்த அளவுக்கு நான் பண்ணுவேன்னு சீமான் அவர்களுக்கு நல்லாவே தெரியும் என்ன பத்தி என தெரிவித்தார்.