ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் நெய் பாதுஷா, நட்ஸ்ஹல்வா, காஜூ பிஸ்தா ரோல், நெய்அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்ஸர் உள்ளிட்ட சிறப்பு இனிப்புகள், கார வகைகள் மற்றும் பால் பொருட்கள் தயாரித்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.