ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்.

தனியார் பயிற்சி மையங்களையும், மருத்துவக்கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடு தான் நீட் தேர்வு என்று திமுக ஆரம்பம் முதல் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.