கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது.

இதனால், நிராகரிப்புக்கான காரணங்களுடன் SMS அனுப்பப்படுகிறது. காரணம் சரியானதாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம். 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்