கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி ஜானகி நகரில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் யோகநாதன் ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்.

இந்நிலையில் டெலிகிராம் செயலியில் பணி கொடுத்து அதன் மூலமாக கமிஷன் வழங்கும் தொழில் குறித்த தகவல் வந்தது. இதனை நம்பி யோகநாதன் பல்வேறு ஆணைகளாக 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி அவருக்கு பணமும் வரவில்லை. கமிஷன் தொகையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து யோகநாதன் கோவை மாநகர சைபர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.