கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கௌதம் உள்பட ஐந்து பேர் கோவை-திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக கௌதம் காரை தருப்பினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஐந்து பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த நேரம் காரில் ஏர்பேக் திறந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.