சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் நேரு தெருவில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடோனில் மூட்டைத் துக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பரூன், 2 வயதுடைய சியோன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். பீகாரை சேர்ந்த ராகுல் தனது குடும்பத்தினருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்து தங்கிள்ளார்.

இந்நிலையில் பூஜா தனது வீட்டு மாடிக்கு சென்று துணி துவைத்துக் கொண்டிருந்தார். அருகே இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் உள்ள கைப்பிடி தடுப்பு சுவரில் இரும்பு குழாய்களுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளி வழியாக சியோன் கீழே விழுந்து உடல் சிதறி உயிரிழந்தான். தன் கண்முன்னே மகன் பலியானதை கண்டு பூஜா அலறி துடித்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.