விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னமடம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி சதீஷ்குமார் யூட்யூபில் வேலை விஷயமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் அமேசான் பகுதி நேர வேலை என்று இருந்தது. அதனை பார்த்து சதீஷ்குமார் அதில் இருந்த லிங்கை கிளிக் செய்தார். இதனையடுத்து சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்யுமாறு கூறினார்.

பின்னர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். இதனை நம்பி சதீஷ்குமார் பல்வேறு தவணைகளாக 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் வரவில்லை. இதனால் சதீஷ்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.