தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ராஜசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்சி கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகையை வாங்கியதாக கூறி ராஜசேகரனின் கடையில் சோதனை நடத்தினர். இதனையடுத்து ராஜசேகரனையும் அவரது மனைவியையும் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகரன் கடந்த மாதம் 25-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜசேகரனின் கடையில் இருக்கும் கல்லாப்பெட்டியில் பில் புக்கில் இருந்த கடிதத்தை கைப்பற்றினார். அதில் எனது சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ் என எழுதப்பட்டிருந்தது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதத்தை எழுதியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.