கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் இருக்கும் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் அருகே இருக்கும் தடுப்பணையில் முத்துவேல் குடும்பத்தினருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துவேலின் மகள் பத்மாஜா(8) தடுப்பணையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பத்மாஜாவை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் சிறுமியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.