அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா(17) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் படுத்து தூங்கினார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அனுசியா வீட்டில் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனுசியாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அனுசியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அனுசியாவை தேடி வருகின்றனர்.