ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வக்குமாரின் மகன் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலையில் இருந்த செல்வ குமாரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.