ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பெரியார் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி வேன் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் பசுபதியும் முருகவேணி என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதலர்கள் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பசுபதியின் பெற்றோருடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.