ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சூரம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவுக்கு அதிமுகவினர் எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு ஸ்டாலின் தான் சிலை வைத்தார். இதற்கிடையில் எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்து இருப்பார்” என்று பேசினார்.