திருச்சி மாவட்டத்தில் உள்ள பசுமடம் பகுதியில் சுந்தரேசன்(62)-வசந்தி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. பெயிண்டராக வேலை பார்த்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் வீட்டு செலவிற்கும், மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் சிரமப்பட்ட தம்பதியினர் உறவினர்களிடம் எந்தவித உதவியும் கேட்கவில்லை.

மேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன், மனைவியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.