திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் பகுதியில் விவசாயியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கஜேந்திரன்(20), விக்னேஷ்(22), சங்கரலிங்கம்(26) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கஜேந்திரன் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.