தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். இதனையடுத்து சொர்க்கவாசல் வழியாக வந்து மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், கிராம மக்கள் சார்பாக செய்துள்ளனர்.