திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக செய்துங்கநல்லூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே  பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் ரயில் சேவை வருகிற 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.