ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஒரு டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1680-க்கும், முல்லை ரூ.1360-க்கும், பட்டு பூ ரூ.85-க்கும், காக்கடா ரூ. 525-க்கும், செண்டு மல்லி ரூ.70-க்கும், கனகாம்பரம் ரூ.460-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும் சம்பங்கி ரூ.60-க்கும், துளசி ரூ. 40-க்கும், செவ்வந்தி ரூ. 100-க்கும் அரளி ரூ.180-க்கும் ஏலம் போனது.