தாய், தந்தையின் பாசம் என்பது ஈடு இணையற்றது ஆகும். அதோடு பாசத்தினால் கட்டிப் போடும் இந்த உறவுகளானது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாதது. தற்போது தந்தை ஒருவர் மகனை ரயில் ஏற்றிவிட்டு விட்டு ஏக்கத்துடன் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மகனை பிரிய மனம் இல்லாமல் ரயில்வே நிலையத்தில் தவிப்புடன் நிற்கும் தந்தையின் வீடியோவை, சென்ற 2022ம் வருடம் அக்,.28 ஆம் தேதி பவன்ஷர்மா என்பவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஷர்மா அப்பதிவில் “ஒவ்வொரு முறையும் எனது அப்பா என்னை வழியனுப்ப வரும்போது நான் மறையும் வரை அவர் என்னை பார்த்தபடியே நடந்து செல்வார். இது ஒவ்வொரு தடவையும் என்னை உணர்ச்சிவசப்பட செய்து விடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pawan Sharma (@pwn.sharma)