சனவரி 29  கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செர்ஜியசு புனிதப்படுத்தப்பட்டார்.[1]

946 – புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.[2]

1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர்.

1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது.

1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

1834 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் தொழிற்சங்க சர்ச்சையைத் தீர்ப்பதற்காக முதன் முதலாகப் பயன்படுத்த உத்தரவிட்டார்.

1861 – கேன்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் சோசோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1886 – செருமனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1891 – லில்லியுகலானி ஹவாய் இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளராக முடிசூடினார்.

1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.

1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.

1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.

1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.

1989 – பனிப்போர்: அங்கேரி தென் கொரியாவுடன் தூதரக உரைவை ஏற்படுத்தியது.

1996 – பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்தார்.

1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள லா பெனீசு ஓப்பரா மாளிகையான தீயினால் அழிந்தது.

2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.

2013 – கசக்சுதானில் அல்மாத்தி நகரில் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

2017 – கியூபெக் துப்பாக்கிச் சூடு, 2017: கியூபெக்கில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809)1843 – வில்லியம் மெக்கின்லி, அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் (இ. 1901)

1853 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1931)

1860 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1904)

1866 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1944)

1881 – ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ், அமெரிக்க உயிரியலாளர் (இ. 1975)

1899 – மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 1984)

1915 – வி. வி. சடகோபன், தமிழக நடிகர், கருநாடக இசைப் பாடகர், கல்வியாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர்

1922 – ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2003)

1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-பிரித்தானிய இயற்பியலாளர் (இ. 1996)

1935 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர் (இ. 2014)

1939 – ஜெர்மைன் கிரீர், ஆத்திரேலிய ஊடகவியலாளர், நூலாசிரியர்

1941 – காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை அரசியல்வாதி

1947 – லிண்டா பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

1954 – ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்

1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்

661 – அலீ, நான்காவது கலீபா, முகம்மது நபியின் மருமகன் (பி. 601)1597 – மகாராணா பிரதாப், வட இந்திய மேவார் மாகாண அரசர் (பி. 1540)

1820 – மூன்றாம் ஜார்ஜ், பிரித்தானிய மன்னர் (பி. 1738)

1859 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1789)

1933 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர் (பி. 1884)

1934 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (பி. 1868)

1963 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)

1980 – எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்

1983 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (பி. 1926)

1991 – வ. ந. நவரத்தினம், இலங்கை தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1929)

1995 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (பி. 1917)

1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

2003 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1928)

2009 – கு. முத்துக்குமார், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனக்குத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்த தமிழ்நாட்டவர்

2010 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (பி. 1919)

2019 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1930)