இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலமாக சமையல் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எல்பிஜி சிலிண்டர் மானியம் 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் சீடரை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதற்கு முதலில் அருகில் உள்ள எல்பிஜி விற்பனை நிலையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். அடுத்ததாக ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிடச் சான்று, பிபிஎல் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எல்பிஜி கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த பிறகு இறுதியாக விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு மானியம் உறுதி செய்யப்படும்.