தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தால் 43 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.