திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பானுப்பிரியா(21) என்பவர் வசித்து வருகிறார். இவரும் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி அஸ்வின் குமார்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே பானுப்பிரியாவின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனை அறிந்த காதலர்கள் வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. காதலர்கள் இரண்டு பேரும் மேஜர் என்பதால் உங்களது விருப்பப்படி வாழலாம் எனக் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.