திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்குள் வெறிநாய்கள் நுழைந்துவிட்டது. இந்த நாய்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் வேடப்பட்டியை சேர்ந்த கதிர்வேல், ரெட்டியபட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி, ரெண்டலபாறையை சேர்ந்த பெருமாள், சந்திரன் உள்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 7 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.