ஈரோட்டில் நேற்று ஹலோ எப்.எம் சார்பில் “லேடீஸ் டே” நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடன போட்டி, பேஷன் வாக், ரங்கோலி, மெஹந்தி, அல்லிதர்பார் போன்ற அனைத்து போட்டிகளிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அறம் அறக்கட்டளை தலைவர் கிருத்திகா சிவகுமார், இலஞ்சி அறக்கட்டளை தலைவர் ஜானகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி போட்டிகளை துவங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மிக்சி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பம்பர் பரிசு போட்டியில் கிருத்திகா என்பவருக்கு முதல் பரிசாக எல்.இ.டி டிவியும், சற்குணம் என்பவருக்கு 2-வது பரிசாக வாஷிங் மெஷினும், பாத்திமா என்பவருக்கு 3-வது பரிசாக குளிர்சாதனப்பட்டியும் வழங்கப்பட்டது.