ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தை உடைத்த காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மரியபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்குள்ள விவசாயி மகேஷ் என்பவரின் வீட்டின் முன்னுள்ள மின்கம்பத்தை உடைத்துள்ளது.

இதில் மின் கம்பம் துண்டாக உடைந்து நல்வாய்ப்பாக மின்சாரம் யானை மீது பாயாமல் அந்த யானை உயிர்த்தப்பியது. இந்த காட்சி விவசாயி மகேஷ் வீட்டின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்தவாறு வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.