தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பல்வேறு அறிவுரைகள் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக இவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்  மாலை நேர ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை, போதைப் பொருட்கள் விற்பனை  ஈடுபடுவோர், அவற்றை பயன்படுத்துவோர், அதற்கு துணையாக செயல்படுபவர்கள் என அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்தினை தடுக்கும் நடவடிக்கையாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதையும் தீவிரப்படுத்த வேண்டும்.

தினமும் மாலை நேர ரோந்து பணியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்கும் பணியை அந்தந்த உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செய்ய வேண்டும். இதனையடுத்து மாலை நேர ரோந்து பணியில் துணை சூப்பிரண்டுகளும் ஈடுபட வேண்டும். அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடாத   சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.