கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் விவசாயியான சந்திரசேகர்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் மத்திகிரி கால்நடை பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.