கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சுரேஷ் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தூளிபட்டியில் வசிக்கும் கனிமொழி என்பவர் சுரேஷிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அவரது பாக்கெட்டில் இருந்த 550 ரூபாயை பறித்துவிட்டு கனிமொழி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சுரேஷ் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கனிமொழியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.