கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி வெள்ளாறு தரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது லாரியின் ஸ்டியரிங் முறிந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி 6 அடி பள்ளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் விரைந்து செயல்பட்டு டிரைவரை பத்திரமாக மீட்டனர். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் சரக்கு லாரியை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.