புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மேலும் 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடந்த போது வாடிவாசலில் இருந்து வந்த காளை பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்தவர்களை வரிசையாக பார்த்தது. இதனையடுத்து பின்னோக்கி சென்ற காலை பார்வையாளர்களை தொந்தரவு செய்யாமல் சுமார் 40 அடிக்கும் மேலாக தாவி சென்றது. இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.