திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.