பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அலமேலு வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையில் நனையாமல் இருப்பதற்காக அலமேலு அருகில் இருந்த புளியமரத்திற்கு அடியில் ஒதுங்கி நின்றுள்ளார்.

அப்போது மின்னல் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அலமேலுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.