விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு பள்ளி அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயஜெமின்(28) தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயஜெமினை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.