கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடை சவுகார் நகர் பகுதியில் ஆஸ்மி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அஸ்மிக்கு உறவினரான வாசிம் அக்ரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது திருமணத்தின் போது வரதட்சணையாக ஆஸ்மின் பெற்றோர் பணமும், 50 பவுன் தங்க நகைகளும் கொடுத்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வாசம் அக்ரம் தனது மனைவியிடம் சரியாக பேசவில்லை. இதனால் ஆஸ்மி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த ஆண்டு தனது முதல் மனைவிக்கு தெரியாமல் வாசிம் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அஸ்மின் தனது கணவர் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் கணவர், மாமனார், மாமியாரிடம் இது குறித்து கேட்டபோது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக அஸ்மி கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வாசிம் அக்ரம் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.