சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு ஸ்ரீராம் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஆவடி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவன் ஆனந்த்(17) என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஜீவன் ஆனந்த் நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வில் ஜீவன் ஆனந்த் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் ஜீவன் ஆனந்த் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவன் ஆனந்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.