தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் நில மீட்பு குழு தாசில்தார் சஜித், செயல் அலுவலர் சுமதி, நில அலுவலர்கள் அஜித், விக்னேஷ், ராஜேஷ் ஆகியோர் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை மீட்டனர். மீதும் உள்ள நிலம் விரைவில் மீட்கப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.