ஆஸ்திரேலியா இந்தியா இடையே தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 472 ரன்கள் எடுத்துள்ளது. இந்த மேட்சில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது சர்வதேச டெஸ்டில் முதல் 6 விக்கெட்டுகள் வரை விளையாடிய இந்திய இணையர்கள், பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இப்படி 50 ரன்கள் குவித்தது இதுவே முதல்முறை. மேலும் இந்திய அணி முதல் விக்கெட்டில் 74 ரன்களும், 2-வது விக்கெட்டில் 114 ரன்களும், 3-வது விக்கெட்டில் 58 ரன்களும், 4-வது விக்கெட்டில் 64 ரன்களும், 5-வது விக்கெட்டில் 84 ரன்களும், 6-வது கிரிக்கெட்டில் 66 ரன்களும் குவித்துள்ளது.