ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் இன்று தொடங்கிய 4-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்திருந்தது.

தற்போது தொடங்கிய மேட்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். களத்தில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 169 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணி தற்போது 169 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்துள்ளது. மேலும் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.