2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நம் நாடு ஒப்பந்தம் ஒன்றை போட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாட்டு தூதரகங்களும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் பற்றியும் இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் பற்றிய தகவல்களை வருடத்திற்கு இரண்டு முறை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அரசுஅந்நாட்டு சிறையில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளது.

அதன்படி 266 மீனவர்கள் 42 பொதுமக்கள் என 308 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று பாகிஸ்தானை சேர்ந்த 74 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 417 பேர் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகத்தில் இந்திய அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.