தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் டைரக்டில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு நட்சத்திரம் பட்டாளமே நடித்து வருகின்றனர். இதன் காரணமாக ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது இந்தியன்-2 படத்தின் சூட்டிங் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கல்பாக்கம் அருகே உள்ள ஒரு கோட்டையில் சூட்டிங் நடைபெற்று வந்தது.

அப்போது சூட்டிங் நடந்த இடத்திலிருந்த கிராம மக்கள் சிலர் படக்குழுவினரிடம் நன்கொடை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் படக்குழுவினர் காவல்துறையினருக்கு புகாரளித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.