கண்ணும் கண்ணும் கொள்யைடித்தால் திரைப்படத்தை டைரக்டு செய்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்கவுள்ள அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இது சரித்திர திரைப்படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்காக ரூ.100 கோடியை பட்ஜெட்டாக ஒதுக்கி இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சிம்புவிற்கு மட்டுமே சம்பளமாக 40 கோடி தருகிறார்கள் எனவும் பேசிக்கொள்கிறார்கள். இவருக்கு மட்டும் ரூ.40 கோடியை கொடுத்துவிட்டு மீதி உள்ள 60 கோடியில் எப்படி சரித்திர படத்தைத் தயாரிக்க முடியும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.